- ஐகோர்ட் கிளை
- பாஜக ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவனம்
- மதுரை
- ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவனம்.பாஜ்
- பிரமுகர் கணேசன்
- கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
- பாஜக
- ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவனம்
- தின மலர்
மதுரை:ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் ஏஜென்டுக்கு ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பாஜ பிரமுகர்கள் கணேசன் மற்றும் சுவாமிநாதன். இருவரும் ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிதி நிறுவன அலுவலக ஏஜென்டாக செயல்பட்ட வெங்கடேச சாஸ்திரிகள் என்பவர் ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,’ வெங்கடேச சாஸ்திரிகள் நிதி நிறுவனத்தில் பிறரிடம் நிதி திரட்டும் ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். இவர் மீது 10 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தற்போது பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது,’ என எதிர்ப்பு தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘ஏற்கனவே ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று உள்ளதால் மற்ற வழக்குகளிலும் ஜாமீன் வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு மற்ற வழக்குகளில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். …
The post பாஜக ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன ஏஜென்டுக்கு ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது!! appeared first on Dinakaran.